தில்லியில் புதிதாக 150 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 150 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,36,946 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 158 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 2 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,25,024 பேர் குணமடைந்துள்ளனர். 10,891 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 1,031 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.