முகப்பு
இந்தியா

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தார் எடியூரப்பா

மேக்கேதாட்டு அணை தொடர்பாக தமிழகம், கர்நாடகம் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், மத்திய அமைச்சரை எடியூரப்பா சந்தித்து பேசியுள்ளார். 

Updated On : 13 ஜூலை 2021, 11:16 am IST
பகிர்:

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்தித்து பேசினார். 

மேக்கேதாட்டு அணை தொடர்பாக தமிழகம், கர்நாடகம் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், மத்திய அமைச்சரை எடியூரப்பா சந்தித்து பேசியுள்ளார். 

பெங்களூருவில் நடைபெற்ற சந்திப்பில் மேக்கேதாட்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

தமிழக எல்லையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் பணிகளில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மேக்கேதாட்டு அணையை நிச்சயம் கட்டியே தீர்வோம் என்று நேற்று அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று (ஜூலை 12) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக நேற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று தில்லி சென்று இது குறித்து அவர்கள் முறையிட உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments