இந்தியா

ஆந்திரம்: குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி

DIN

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கைக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

நேற்று (அக்.14) விஜயவாடாவிலுள்ள கைக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி உட்பட 4 சிறுவர்கள் அருகே இருந்த குளத்திற்கு குளிக்கச் சென்றனர்.அப்போது எதிர் பாராத விதமாக ஒரு சிறுவன் ஆழத்திற்குச் சென்று உயிருக்கு போராடியபோது நீச்சல் தெரியாத மற்ற சிறுவர்கள் காப்பாற்றுவதற்காக ஆழமான பகுதிக்கு சென்றனர். 

பின் சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் நான்கு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பின் தீயணைப்புப் படையினர் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களின் இறப்பால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT