'நான்தான் சொன்னேனே': சித்து ராஜிநாமா குறித்து அமரீந்தர் ட்வீட்
நவ்ஜோத் சிங் சித்து நிலையானவர் அல்ல என்று தான் கூறியதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நவ்ஜோத் சிங் சித்து நிலையானவர் அல்ல என்று தான் கூறியதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாபில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். அப்போதைய முதல்வர் அமரீந்தர் சிங் எதிர்ப்பை மீறி அவர் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதன்பிறகு, நவ்ஜோத் சிங் சித்து, அமரீந்தர் சிங் இடையிலான மோதல் போக்கு தீவிரமானதைத் தொடர்ந்து, கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் அமரீந்தர். இதையடுத்து, சரண்ஜீத் சிங் சன்னி கடந்த 20-ம் தேதி மாநில முதல்வராகப் பதவியேற்றார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில் அதை ராஜிநாமா செய்வதாக சித்து செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
சித்துவின் பெயரைக் குறிப்பிடாமல் ட்விட்டர் பக்கத்தில் அமரீந்தர் பதிவிட்டுள்ளது:
"அவர் நிலையான மனிதர் அல்ல, எல்லை மாநிலமான பஞ்சாப்புக்குத் தகுதியானவர் கிடையாது என்று நான்தான் சொன்னேனே."