உதம்பூரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 18 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 18 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 18 பேர் காயமடைந்தனர்.
பேருந்து பர்மீனில் இருந்து உதம்பூருக்கு சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார்டி கிராமம் அருகே உள்ள பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும், காயமடைந்த 11 மாணவர்கள் உள்பட 18 பேர் சிகிச்சைக்காக உதம்பூர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது, அவர்களில் ஒருவரான பர்மீனைச் சேர்ந்த அசோக்குமார் (50). சிறப்புச் சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.