இந்தியா

உதம்பூரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 18 பேர் காயம்

DIN

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 18 பேர் காயமடைந்தனர். 

பேருந்து பர்மீனில் இருந்து உதம்பூருக்கு சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார்டி கிராமம் அருகே உள்ள பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்துள்ளது. 

சம்பவ இடத்துக்கு உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும், காயமடைந்த 11 மாணவர்கள் உள்பட 18 பேர் சிகிச்சைக்காக உதம்பூர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது, அவர்களில் ஒருவரான பர்மீனைச் சேர்ந்த அசோக்குமார் (50). சிறப்புச் சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT