இந்தியா

உதம்பூரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 18 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 18 பேர் காயமடைந்தனர். 

DIN

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 18 பேர் காயமடைந்தனர். 

பேருந்து பர்மீனில் இருந்து உதம்பூருக்கு சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார்டி கிராமம் அருகே உள்ள பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்துள்ளது. 

சம்பவ இடத்துக்கு உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும், காயமடைந்த 11 மாணவர்கள் உள்பட 18 பேர் சிகிச்சைக்காக உதம்பூர் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது, அவர்களில் ஒருவரான பர்மீனைச் சேர்ந்த அசோக்குமார் (50). சிறப்புச் சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் - 100! சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி!

ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு காவல் துறை சம்மன்!

இலங்கை சிறையில் இருந்து ஆந்திர மீனவர்கள் 4 பேர் விடுதலை!

பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே டிரைலர்!

பூந்தளிர்... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT