இந்தியா

நாட்டில் புதிதாக 16,047 பேருக்கு தொற்று; மேலும் 54 பேர் பலி

DIN


புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,047 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதுகுறித்த வெளியிட்டுள்ள அறிக்கையையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,047 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,41,90,697 ஆக உள்ளது. 

நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில் 3,546 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளது. இதையடுத்து  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,28,261 ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.29 சதவீதமாகவும், குணமடைந்தோரின் விகிதம் 98.62 சதவீகிதமாகவும் உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,26,826 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவில் இருந்து மேலும் 19,928 போ் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,35,35,610-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.50 சதவீதமாக உள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 2,07,03,71,204 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 15,21,429 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT