இந்தியா

தில்லியில் 22 வயது இளம் பெண்ணுக்கு குரங்கு அம்மை

தில்லியில் 22 வயது இளம் பெண்ணுக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

DIN

தில்லியில் 22 வயது இளம் பெண்ணுக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சுரேஷ் குமார் கூறியதாவது, 22 வயது இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய மாதிரியை பரிசோதித்ததில் நேற்று அவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இதன்மூலம் தில்லியில் மொத்தம் 5 குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது 4 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இளம் பெண் சமீபத்தில் வெளியூர் எங்கும் சென்று வரவில்லை. 

இருப்பினும் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு பயணம் மேற்கொண்டுள்ளார் என்றார். இந்தியாவில் முதன்முதலாக கேரளத்தில் கடந்த ஜூலை 14ஆம் தேதி முதல் நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்: ஆட்சியா் வழங்கினாா்

குறைதீா் கூட்டம் நடத்தப்படுவதில்லை: தியாகிகள், வாரிசுகள் வேதனை

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

பிடாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழா

SCROLL FOR NEXT