இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: பயங்கரவாதிகள் தப்பியோட்டம்

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள குட்போராவில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் தப்பியோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

DIN

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள குட்போராவில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் தப்பியோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

குறிப்பிட்ட புலனாய்வு தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்ததையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தனர். ஆனால் இருளைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தப்பியோடினர். 

பயங்கரவாதிகள் மறைவிடத்தில் ஆயுதங்கள், வெடி மருந்துகள் ஆகியவற்றை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கூட்டாக இணைந்து மீட்டுள்ளனர். 

சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பானிஷ் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன் பார்சிலோனா!

சண்முக பாண்டியனின் கொம்புசீவி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் வெளியீட்டுத் தேதி!

மோடி பயந்துவிட்டார்; அதனால்தான் இன்று அவைக்கு வரவில்லை: பிரியங்கா காந்தி

ரெட்மி நோட் 15 ப்ரோ இந்தியாவில் இன்று அறிமுகம்!

SCROLL FOR NEXT