இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: பயங்கரவாதிகள் தப்பியோட்டம்

DIN

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள குட்போராவில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் தப்பியோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

குறிப்பிட்ட புலனாய்வு தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்ததையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தனர். ஆனால் இருளைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தப்பியோடினர். 

பயங்கரவாதிகள் மறைவிடத்தில் ஆயுதங்கள், வெடி மருந்துகள் ஆகியவற்றை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கூட்டாக இணைந்து மீட்டுள்ளனர். 

சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT