இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: பயங்கரவாதிகள் தப்பியோட்டம்

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள குட்போராவில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் தப்பியோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

DIN

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள குட்போராவில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் தப்பியோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

குறிப்பிட்ட புலனாய்வு தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்ததையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தனர். ஆனால் இருளைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தப்பியோடினர். 

பயங்கரவாதிகள் மறைவிடத்தில் ஆயுதங்கள், வெடி மருந்துகள் ஆகியவற்றை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கூட்டாக இணைந்து மீட்டுள்ளனர். 

சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாங்காங்: வானுயரக் கட்டடங்களை தீக்கிரையாக்கிய மூங்கில் வலை! அடுத்து என்ன?

சூலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்! உடனடியாக பிடிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!

இலங்கையில் உருவானது டிக்வா புயல்!

“MGR போல விஜய்? வாய்ப்பில்லை! தம்பி இன்னும் நடிகர்தானே!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மகிந்திரா பிஇ6 ஃபார்முலா சொகுசு கார் விலை வெறும் ரூ.18,000! அட உண்மைதாங்க

SCROLL FOR NEXT