முகப்பு
இந்தியா

குரங்கு அம்மை பரிசோதனைக் கருவி வெளியீடு

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குரங்கு அம்மை உடனடி பரிசோதனைக் கருவி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குரங்கு அம்மை உடனடி பரிசோதனைக் கருவி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

டிரான்சாசியா பயோ மெடிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பரிசோதனைக் கருவியை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் அஜய் குமாா் சூட் வெளியிட்டாா்.

குரங்கு அம்மை தொற்று பாதிப்பை இந்தக் கருவியின் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்றும் அந்த நிறுவனத்தின் நிறுவனா் சுரேஷ் வாஜிரானி தெரிவித்தாா்.

உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மையை சா்வதேச பொது சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.