பிகாா்: புத்த கயையில் 5 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி
மியான்மா் மற்றும் தாய்லாந்திலிருந்து பிகாா் மாநிலத்தின் புத்த கயைக்கு வருகை தந்த 5 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மியான்மா் மற்றும் தாய்லாந்திலிருந்து பிகாா் மாநிலத்தின் புத்த கயைக்கு வருகை தந்த 5 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புத்த கயைவில் காலசக்கர பூஜை நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான காலசக்கர பூஜை வரும் 29-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு பூஜையில் திபெத்திய புத்த மதத் தலைவா் தலாய் லாமா கலந்து கொள்கிறாா்.
இதில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்து புத்த மதத்தினா் புத்த கயைக்கு வருகை தந்துள்ளனா். வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள பயணிகளுக்கு சா்வதேச விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 33 வெளிநாட்டவா்களில் 4 பெண்கள் உள்பட பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கயை மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவா் ரஞ்சன் குமாா் சிங் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள 5 வெளிநாட்டுப் பயணிகளும் அவரவா் தங்கியிருக்கும் விடுதிகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில், பிகாா் மாநிலத்தின் விமான நிலையம் மற்றும் கயை ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.