முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பனியில் சிக்கி உயிருடன் புதைந்த 7 வயது சிறுவன்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் 7 வயது சிறுவன் பனியில் சிக்கி உயிருடன் புதைந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் 7 வயது சிறுவன் பனியில் சிக்கி உயிருடன் புதைந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். 

மத்வா பகுதியின் திலார் கிராமத்தில் கடந்த திங்களன்று மாலை பஷீர் அகமதுவின் மகன் முத்தரிப் பஷீர் காணாமல் போயுள்ளான். 

இதுகுறித்து துணை ஆணையர் அசோக் குமார் ஷர்மா கூறுகையில், 

குழந்தை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது, கூரையிலிருந்து பனி படர்ந்து கீழே விழுந்துள்ளது. அதில் சிக்கிய குழந்தை உயிருடன் புதைந்துள்ளான். 

வீட்டிற்கு அருகாமையிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.