ஜம்மு-காஷ்மீரில் பனியில் சிக்கி உயிருடன் புதைந்த 7 வயது சிறுவன்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் 7 வயது சிறுவன் பனியில் சிக்கி உயிருடன் புதைந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் 7 வயது சிறுவன் பனியில் சிக்கி உயிருடன் புதைந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
மத்வா பகுதியின் திலார் கிராமத்தில் கடந்த திங்களன்று மாலை பஷீர் அகமதுவின் மகன் முத்தரிப் பஷீர் காணாமல் போயுள்ளான்.
இதுகுறித்து துணை ஆணையர் அசோக் குமார் ஷர்மா கூறுகையில்,
Advertisement
Advertisement
குழந்தை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது, கூரையிலிருந்து பனி படர்ந்து கீழே விழுந்துள்ளது. அதில் சிக்கிய குழந்தை உயிருடன் புதைந்துள்ளான்.
வீட்டிற்கு அருகாமையிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.