ஹைதராபாத்தில் கொட்டி தீர்த்த மழை: போக்குவரத்து பாதிப்பு
ஹைதராபாத்தில் இன்று காலை திடீரென கனமழை பெய்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுள்ளது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று காலை திடீரென கனமழை பெய்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தெலங்கானா மாநிலத்திலும் மிகக் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்தது.
ஹைதராபாத்தில் வெப்பம் மிக அதிகமாக இருந்த நிலையில், இன்று காலை திடீரென கனமழை கொட்டியது. பலத்த காற்று மற்றும் மின்னலுடன் பெய்த மழையால் ஹைதராபாத்தில் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுதுள்ளது.
Advertisement
Advertisement
கலபதார் மற்றும் யாகுட்புரா ஆகிய மாவட்டங்களிலும் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. பலத்த காற்றும் வீசியதால், மரங்களும் சில இடங்களில் வேரோடு சாய்ந்ததுள்ளது. இதனால், சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுள்ளது.