ஹைதராபாத்தில் கொட்டி தீர்த்த மழை: போக்குவரத்து பாதிப்பு
ஹைதராபாத்தில் இன்று காலை திடீரென கனமழை பெய்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுள்ளது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று காலை திடீரென கனமழை பெய்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தெலங்கானா மாநிலத்திலும் மிகக் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்தது.
ஹைதராபாத்தில் வெப்பம் மிக அதிகமாக இருந்த நிலையில், இன்று காலை திடீரென கனமழை கொட்டியது. பலத்த காற்று மற்றும் மின்னலுடன் பெய்த மழையால் ஹைதராபாத்தில் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுதுள்ளது.
Advertisement
Advertisement
கலபதார் மற்றும் யாகுட்புரா ஆகிய மாவட்டங்களிலும் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. பலத்த காற்றும் வீசியதால், மரங்களும் சில இடங்களில் வேரோடு சாய்ந்ததுள்ளது. இதனால், சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.