முகப்பு
இந்தியா

சிப்லா மருந்து நிறுவனத்தின் தூதுவராகும் இந்தி நடிகர்

மும்பை : சிப்லா மருந்து நிறுவனம் மேக்‌ஷிரிச்சின்  தூதுவராகிறார் பாலிவுட்டின் ஆயுஷ்மன் குரானா. 

Updated On : 17 மே 2022, 6:13 pm IST
ஆயுஷ்மன் குரானா
பகிர்:

மும்பை : சிப்லா மருந்து நிறுவனம் மேக்‌ஷிரிச்சின்  தூதுவராகிறார் பாலிவுட்டின் ஆயுஷ்மன் குரானா. 

ஆயுஷ்மன் குரானாவின் புதுமையான கதாப்பாtத்திரங்களுக்கு பெயர் போனவர். அவர் இந்தியாவின் மிகவும் திறமைசாலியான பல்வேறு திறன் பெற்ற நடிகர். அவரது புதுமையான படங்கள் வசூலிலும் சாதனை படைப்பதால் அவர் இளஞர்களுக்கான அடையாளமாக திகழ்கிறார். 

மேக்‌ஷிரிச்சின் சிஇஒ சிவம் புரி கூறியதாவது : ஆயுஷ்மன் குரானா எங்களது நிறுவனதுக்கு ஏற்ற சரியான தூதுவர். அவர் ஒரு கலைஞனாக புத்துணர்ச்சியோடு இருக்கிறார். பல மில்லியன் மக்களை சென்றடையும் எங்கள் மேக்‌ஷிரிச் நிறுவனம் மருத்துவ துறையில் சிறந்து விளங்குகிறது. அரிதாகவே நிறைய தயாரிப்புகள் ஒரு நிறுவனத்திற்கு கீழ் வரும். ஆயுஷ்மன் குரானா தானே இந்த பல்வேறு திறமைக்கு சரியான பொறுத்தம். 

Advertisement

Advertisement

“இந்த இக்கட்டான காலத்தில் எல்லோருக்கும் ஆற்றல் தேவை வாழ்வதற்கு. ஆரோக்கியமான வாழ்வுக்கு பல்வேறு வைட்டமின்கள் தேவை. இவையெல்லாம் வழங்கும் மேக்‌ஷிரிச்ன் தூதுவராக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. வாழ்க்கையில் நிறைவான ஆற்றலுடனும்  அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வாழ தொடங்குவோம் வாருங்கள்” என ஆயுஷ்மன் குரானா கூறினார். 

சிப்லா முதன்மையாக சுவாச நோய், இருதய நோய், கீல்வாதம், நீரிழிவு நோய், எடை கட்டுப்பாடு மற்றும் மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளையும் இன்னும் பல மருந்துகளையும் தயாரிக்கின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments