பிஎஃப். வட்டி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லையா? என்ன செய்வது? 
இந்தியா

பிஎஃப் வட்டி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லையா? என்ன செய்வது?

ஒருவர் செலுத்தியிருக்கும் தொகைக்கு வட்டி வரவு வைக்கப்படாமல் இருந்தால் அதற்குக் காரணம் என்ன என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

DIN

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில், ஒருவர் செலுத்தியிருக்கும் தொகைக்கு வட்டி வரவு வைக்கப்படாமல் இருந்தால் அதற்குக் காரணம் என்ன என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, ஒருவரது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிஎஃப் கணக்கில், வட்டி வரவு வைக்கப்படவில்லை என்றால், மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றுதான் அர்த்தமாகுமே தவிர, யாருக்கும் வட்டி வரவு வைக்கப்படாமல் இருக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

எந்த பயனாளருக்கும் பிஎஃப் வட்டி வரவு வைக்கப்படாமல் விடுபடாது. அனைத்து பிஃப் பயனாளர்களுக்கும் உறுதியாக வட்டி வரவு வைக்கப்பட்டுவிடும். ஒரு வேளை, உங்கள் பிஎஃப் கணக்கு அறிக்கையில் வரவு வைக்கப்படாவிட்டால், புதிதாக பிஎஃப் கொண்டு வந்த மென்பொருள் பதிவேற்றப்படாமல் இருக்கலாம் என்று டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரின் கேமிடல் நிர்வாகியும், இன்போசிஸ் முன்னாள் இயக்குநருமான மோகன்தாஸ் பாய் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை இட்டிருந்தார். அதில், அன்புக்குரிய இபிஎஃப்ஓ, எங்கே எனது வட்டி? என்று கேள்வி எழுப்பியதோடு, பிரதமர் மோடிக்கும் சுட்டுரைப் பதிவை டேக் செய்து, உடனடியாக மாற்றம் தேவை என்றும் வலியுறுத்தியிருந்தார்.

அது மட்டுமல்லாமல், இவ்வாறு வட்டி வரவு வைக்கப்படாவிட்டால், ஒருவர் மே மாதத்தில் ஓய்வுபெறுகிறார் என்றால் அவருக்கு எந்த தொகை கிடைக்கும். வட்டி பிறகு அவருக்கு செலுத்தப்படுமா என்றும் மோகன்தாஸ் கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT