பிஎஃப். வட்டி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லையா? என்ன செய்வது? 
இந்தியா

பிஎஃப் வட்டி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லையா? என்ன செய்வது?

ஒருவர் செலுத்தியிருக்கும் தொகைக்கு வட்டி வரவு வைக்கப்படாமல் இருந்தால் அதற்குக் காரணம் என்ன என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

DIN

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில், ஒருவர் செலுத்தியிருக்கும் தொகைக்கு வட்டி வரவு வைக்கப்படாமல் இருந்தால் அதற்குக் காரணம் என்ன என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, ஒருவரது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிஎஃப் கணக்கில், வட்டி வரவு வைக்கப்படவில்லை என்றால், மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றுதான் அர்த்தமாகுமே தவிர, யாருக்கும் வட்டி வரவு வைக்கப்படாமல் இருக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

எந்த பயனாளருக்கும் பிஎஃப் வட்டி வரவு வைக்கப்படாமல் விடுபடாது. அனைத்து பிஃப் பயனாளர்களுக்கும் உறுதியாக வட்டி வரவு வைக்கப்பட்டுவிடும். ஒரு வேளை, உங்கள் பிஎஃப் கணக்கு அறிக்கையில் வரவு வைக்கப்படாவிட்டால், புதிதாக பிஎஃப் கொண்டு வந்த மென்பொருள் பதிவேற்றப்படாமல் இருக்கலாம் என்று டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரின் கேமிடல் நிர்வாகியும், இன்போசிஸ் முன்னாள் இயக்குநருமான மோகன்தாஸ் பாய் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை இட்டிருந்தார். அதில், அன்புக்குரிய இபிஎஃப்ஓ, எங்கே எனது வட்டி? என்று கேள்வி எழுப்பியதோடு, பிரதமர் மோடிக்கும் சுட்டுரைப் பதிவை டேக் செய்து, உடனடியாக மாற்றம் தேவை என்றும் வலியுறுத்தியிருந்தார்.

அது மட்டுமல்லாமல், இவ்வாறு வட்டி வரவு வைக்கப்படாவிட்டால், ஒருவர் மே மாதத்தில் ஓய்வுபெறுகிறார் என்றால் அவருக்கு எந்த தொகை கிடைக்கும். வட்டி பிறகு அவருக்கு செலுத்தப்படுமா என்றும் மோகன்தாஸ் கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT