முகப்பு
இந்தியா

இந்தியாவில் மேலும் 6,809 பேருக்கு கரோனா

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 6,809 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   

Updated On : 4 செப்டம்பர் 2022, 9:49 am IST
பகிர்:

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 6,809 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,809 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,44,56,535 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 55,114 ஆக உள்ளது. 

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 26 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,27,991 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 8,414 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,38,73,430 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் 19,35,814 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  நாட்டில் இதுவரை 213.20 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 3,20,820 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 88.71 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.