FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அசத்தல் வெற்றியுடன் காலிறுதியில் அஷ்மிதா, ரக்ஷிதா

தென் கொரியாவில் நடைபெறும் கொரியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 8:02 am IST
கோப்புப்படம்
பகிர்:

தென் கொரியாவில் நடைபெறும் கொரியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அஷ்மிதா சாலிஹா 20-22, 21-15, 21-19 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஜப்பானின் ஹினா அகெசியை வீழ்த்தினார்.

ரக்ஷிதா ஸ்ரீ 18-21, 21-19, 21-18 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் தன்வி சர்மாவை தோற்கடித்து அசத்தினார்.

Advertisement

Advertisement

இதையடுத்து காலிறுதியில் அஷ்மிதா - ரக்ஷிதா மோதுகின்றனர். போட்டியில் தற்போது களத்திலிருக்கும் இந்தியர்கள், இவர்கள் இருவர் மட்டுமே.

ஆடவர் இரட்டையரில், கிருஷ்ணபிரசாத் கராகா/பிருத்வி கிருஷ்ணமூர்த்தி ராய் இணை 7-21, 8-21 என்ற வகையில், மலேசியாவின் மான் வெய் சோங்/சோ வூய் யிக் கூட்டணியிடம் தோல்வியுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments