இந்தியா

உ.பி.யில் சோகம்: ஆட்டுக்குட்டியை மீட்க முயன்றவருக்கு நேர்ந்த கதி!

DIN

உத்தரப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்க முயன்ற  இரண்டு மேய்ப்பாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இறந்தவர்கள் தரம் சிங் (22) மற்றும் அவரது மாமா சர்மன் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கோவர்தன் காவல் நிலைய அதிகாரி கூறுகையில், 

வெள்ளிக்கிழமை வழக்கம்போல் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். திரும்பிவரும்போது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்க தரம்சிங் இறங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால், சர்மனும் ஆழ்துளைக் கிணற்றில் இறங்கினார். அவரும் திரும்பவில்லை. 

பின்னர், கிராமத்தினர் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு இருவரையும் வெளியே எடுத்தனர். 

ஆனால், அவர்கள் இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்ட ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT