ஏ.சி. வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
கர்நாடகத்தில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடகத்தில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் மரியம்மனஹள்ளி கிராமத்தில் வெங்கட் பிரசாந்த் (42), அவரது மனைவி சந்திரகலா)(38), மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று நள்ளிரவு 12.40 மணியளவில் ஏ.சி. வெடித்து, வீடு முழுவதும் தீப்பற்றியுள்ளது. இதில் நால்வருமே உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement
ஏ.சி.யில் இருந்து வாயு கசிந்து, பின்னர் மின் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், கடன் தொல்லை அல்லது மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டவர்களா? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.