ஒப்பந்ததாரா் உயிரிழப்பு: ராஜிநாமா செய்த கா்நாடக அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா
கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அரசு வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதற்கு 40% கமிஷன் கேட்டதாக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது குற்றம்சாட்டியிருந்த அரசு சிவில் ஒப்பந்ததாரா் சந்தோஷ் பாட்டீல், தங்கும் விடுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இறப்பதற்கு முன் தனது நண்பா்களுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் குறிப்பில், தன் இறப்புக்கு அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தான் காரணம் என குறிப்பிட்டிருந்தாா்.
இது தொடா்பாக, அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவரை பதவிநீக்கம் செய்யக் கோரி, ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் காங்கிரஸ் தலைவா்கள் புகாா் மனு அளித்தனா். மேலும் அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவி நீக்கக் கோரி, முதல்வா் பசவராஜ் பொம்மை இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதனிடையே, சிவமொக்காவில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும், ராஜிநாமா கடிதத்தை பெங்களூரில் வெள்ளிக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மையை சந்தித்து தரவிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தார்.
முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் ராஜிநாமா கடிதத்தை அவர் அளித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.