FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசிப் பேருந்து மும்பையில் இயக்கம்

நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துப் போக்குவரத்தை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று துவக்கி வைத்தார்.

Updated On : 18 ஆகஸ்ட் 2022, 6:17 pm IST
நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசிப் பேருந்து மும்பையில் இயக்கம்
பகிர்:


நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துப் போக்குவரத்தை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று துவக்கி வைத்தார்.

இஐவி22 என்ற மின்சாரத்தில் இயங்கும் இந்த இரட்டை அடுக்குப் பேருந்து, 250 கி.மீ. தொலைவு வரை இயக்கப்படும் திறன் கொண்டது.

இந்துஜா குழுமத்தின் அஷோக் லைலேண்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கம் இந்த இரட்டை அடுக்குப் பேருந்தில் அதிகபட்சமாக 65 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தானியங்கி கதவுகள் மற்றும் சிசிடிவி கேமரா வசதித கொண்டது.

முதற்கட்டமாக 200 மின்சாரத்தில் இயங்கும் இரட்டை அடுக்குப் பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டுக்குள் 50 பேருந்துகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments