FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கர்ப்பப்பை புற்றுநோய்: இந்தியாவின் முதல் தடுப்பூசி நாளை அறிமுகம்

பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்காக இந்தியாவில் முதல்முறை உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. 

Updated On : 31 ஆகஸ்ட் 2022, 5:54 pm IST
கோப்புப் படம்
பகிர்:

பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்காக இந்தியாவில் முதல்முறை உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. 

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனமும் இணைந்து இந்தத் தடுப்பூசியை அறிமுகம் செய்கிறது.

இது தொடர்பாக பேசிய நீதி ஆயோக்கின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்காக இந்தியாவிலேயே தடுப்பூசி உருவாக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இதனை அறிமுகம் செய்வது மகிழ்ச்சியான அனுபவம். இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்வதன் மூலம் நமது மகள்களும், பெண்களும் மகிழ்ச்சி அடைவார்கள். நீண்ட நாள்களாக காத்திருந்த தடுப்பூசி அவர்களுக்கு கிடைக்கவுள்ளது. 

இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட தடுப்பூசி தேவைகளிலேயே இது மிகப்பெரியது. 85 முதல் 90 சதவிகிதம் பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது குறிப்பிட்ட நுண்கிருமியால் ஏற்படுகிறது. இந்த தடுப்பூசி கொண்டு அந்த நுண் கிருமிதொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments