FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆர்ஜென்டீனா கால்பந்து அணிக்கும் எஸ்பிஐ வங்கிக்கும் தொடர்பு! வைரல் காரணம்

ஆர்ஜென்டீனா - பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியையொட்டி எஸ்பிஐ வங்கிக் கணக்குப் புத்தகத்தின் படங்கள் வைரலாகி வருகின்றன. 

Updated On : 16 டிசம்பர் 2022, 4:55 pm IST
ஆர்ஜென்டீனா கால்பந்து அணிக்கும் எஸ்பிஐ வங்கிக்கும் தொடர்பு
பகிர்:

ஆர்ஜென்டீனா - பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியையொட்டி எஸ்பிஐ வங்கிக் கணக்குப் புத்தகத்தின் படங்கள் டிவிட்டரில் வைரலாகி வருகின்றன. 

அதாவது, ஆர்ஜென்டீனா அணியின் ஜெர்ஸி நிறமும், எஸ்பிஐ வங்கி கணக்குப் புத்தகமும் ஒரே மாதிரியான நிறங்கள் மற்றும் தோற்றத்தைக் கொண்டுள்ளன. 

இதனால் இந்தியர்கள் பலரும் எஸ்பிஐ வங்கியின் கணக்குப் புத்தகத்தின் அட்டைப் படத்தை சுட்டுரையில் பகிர்ந்து கேலி செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், உலக அளவில் கால்பந்து போட்டி மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. 

மெஸ்ஸியினுடைய ஆர்ஜென்டீனா அணியும், பிரான்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. 35 வயது மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை என்பதால், கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இதனால் இந்த போட்டிகள் மீதான சுவாரசியம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஆர்ஜென்டீனா கால்பந்து அணியையும், எஸ்பிஐ வங்கி கணக்குப் புத்தகத்தின் அட்டையையும் ஒப்பிட்டு பலர் சுட்டுரையில் படங்களைப் பதிவேற்றி வருகின்றனர். இதனால் உலகக்கோப்பை கால்பந்து ஹேஷ்டேக்கில், எஸ்பிஐ வங்கி கணக்குப் புத்தக அட்டை வைரலாகி வருகிறது.

எஸ்பிஐ வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முகப்பு அட்டையின் நிறமும், ஆர்ஜென்டீனா அணியின் கொடி மற்றும் ஜெர்ஸியின் நிறமும் ஒரே மாதிரியாக உள்ளதால், டிவிட்டரில் அவ்வாறு பகிரப்படுகிறது. 

டிவிட்டர் பயனாளர் ஒருவர், இந்தியர்கள் ஆர்ஜென்டீனா அணியை ஏன் அதிக அளவில் உற்சாகப்படுத்துகின்றனர் என்று இப்போதுதான் புரிகிறது என கேலியாக கருத்து பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments