நாட்டில் புதிதாக 30,615 பேருக்கு கரோனா; 514 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,615 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,615 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிதாக 30,615 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 514 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 82,988 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,09,872 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,18,43,446 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்
இன்றைய நிலவரப்படி 3,70,240 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 173.86 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.