பப்பி லஹரி மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரி மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரி மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மும்பை மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த பப்பி லஹரி(வயது 69) இன்று அதிகாலை உயிரிழந்தார். இவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், லஹரியின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
குடியரசுத் தலைவர் டிவிட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில்,
“பப்பி லஹிரி இணையற்ற பாடகர் மற்றும் இசையமைப்பாளர். இவரது பாடல்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலம் அடைந்தன. அவரது மறக்கமுடியாத பாடல்கள் நீண்ட காலமாக கேட்போரை மகிழ்விக்கும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.”
இதையும் படிக்க | பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்
பிரதமர் டிவிட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில்,
“பப்பி லஹிரியின் இசை அனைத்தும் உள்ளடக்கியதாகவும்., பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. தலைமுறை தலைமுறையாக மக்கள் அவரது படைப்புகளை தொடர்புபடுத்த முடியும். அவருடைய கலகலப்பான இயல்பை அனைவரும் தவற விடுவார்கள். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்.”
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.