காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி அவசர ஆலோசனை
காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரியின் கருத்துக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரியின் கருத்துக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ஆதிர் ரஞ்சன் செளத்ரி மற்றும் காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இன்று பாஜகவினர் முழக்கமிட்டனர்.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் பாஜக - காங்கிரஸ் அமளி: பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில், காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக, அவதூறு கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஆதிர் ரஞ்சன் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டார்” என்று சோனியா காந்தி பதிலளித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.