கரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம்
கரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
புதுதில்லி: கரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
இந்தியா, புதுதில்லியில் கரோனா கட்டுக்குள் இருந்தாலும், கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து கொண்டு வருகிறது.
இதையும் படிக்க: சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் நாளை பதவியேற்பு
Advertisement
Advertisement
இந்நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக் கோரி தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.