ஜெர்மனியில் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு
ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெர்மனி சென்றடைந்தார்.
ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெர்மனி சென்றடைந்தார்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 அமைப்பின் மாநாடு ஜெர்மனியில் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறாா். இதற்காக அவர் சனிக்கிழமை புறப்பட்டு இன்று ஜெர்மனி சென்றடைந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 11,739 பேருக்கு கரோனா
அவர் அதிகாலை மியூனிக் நகரைச் சென்றடைந்ததாக பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மியூனிக் நகரில் பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெற்றோர்கள் சிலர் குழந்தைகளுடன் விடுதியில் வரவேற்பு அளித்தனர். அங்கு வந்திருந்த குழந்தைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மியூனிக் நகரில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றவும் உள்ளார். இந்த நிகழ்ச்சியை எதிர்நோக்கி இருப்பதாக அங்கிருந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.