மம்தாவின் விமானத்தை நோக்கி வந்த மற்றொரு விமானம்
தனது விமானத்திற்கு எதிரே மற்றொரு விமானம் மோதும் வகையில் பறந்துவந்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார் தெரிவித்துள்ளார்.
தனது விமானத்திற்கு எதிரே மற்றொரு விமானம் மோதும் வகையில் பறந்துவந்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார் தெரிவித்துள்ளார்.
விமானியில் சாதூர்யமான நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படிக்க | பாஜக செய்வது மக்கள் தொடர்பு வேலையை மட்டுமே: ராகுல் காந்தி
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது விமானம் பறந்துகொண்டிருந்தபோது எந்தவித முன்னறிவிப்புமின்றி மற்றொரு விமானம் எதிரே பறந்து வந்தது. இதனால் எனது விமானம் 8 ஆயிரம் அடி கீழே இறங்கியது.
விமானியின் நேர்த்தியால் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்தோ, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டிலிருந்தோ எந்தவித அறிவிப்பையும் இதுவரை பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.