கோவிஷீல்டு 2ம் தவணை கால இடைவெளி குறைகிறது: தகவல்
கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது தவணைக்கான கால இடைவெளியை குறைக்க நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறுவுறுத்தியுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது தவணைக்கான கால இடைவெளியை குறைக்க நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறுவுறுத்தியுள்ளது.
12 முதல் 16 வாரங்கள் உள்ள கோவிஷீல்டு இடைவெளியை 8 முதல் 16 வாரங்களாக குறைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால், கரோனா பரவல் விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
படிக்க | தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 12 முதல் 16 வயதுடைய சிறார்களுக்கும் தற்போது தனி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இரண்டு தவணையாக போடப்படும் தடுப்பூசியில், கோவிஷீல்டு இரண்டாவது தவணைக்கு தடுப்பூசிக்கு 12 முதல் 16 வாரங்கள் கால இடைவெளி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இதனைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இது பரிந்துரை மட்டுமே என்றும், இதில் எந்தவொரு இறுதி வரையறையும் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்வோரை ஊக்கப்படுத்தவும், இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு காத்திருப்போருக்காவும் மட்டுமே பரிந்துரைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரை இந்தியாவில் 181.21 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 1.50 கோடி மட்டுமே கோவேக்ஸின் என்று மத்திய அரசு தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.