அசானி புயல்: ஆந்திரத்திற்கு ‘ரெட் அலர்ட்’
அசானி புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் ஆந்திர பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசானி புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் ஆந்திர பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான அசானி புயல், ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் இருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 115 கி.மீ. வேகத்தில் வடக்கு ஆந்திராவை நோக்கி தீவிர புயல் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை காக்கிநாடாவுக்கும் விசாகப்பட்டினத்திற்கு இடையே கரையைக் கடந்து ஒடிசா நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதனால், கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மீட்புப் பணிகளுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.