முகப்பு
இந்தியா

குரங்கு அம்மை: விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தல்

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களுக்கு பொது சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Updated On : 31 மே, 2022 at 5:49 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:54 PM

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களுக்கு பொது சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிநாட்டு பயணிகளிடம் குரங்கு அம்மை அறிகுறி ஏதேனும் இருந்தால் மாதிரிகளை பரிசோதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடல்சோர்வு உள்ளிட்டவை இருக்கும் பயணிகளின் மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என்றும், அவற்றை பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

பெரியம்மை வகையைச் சோ்ந்த குரங்கு அம்மை வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. 

இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருவது இந்த மாத தொடக்கத்தில் தெரியவந்தது. 

காய்ச்சல், கொப்புளம் மற்றும் கணுக்களில் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்படும் இந்த தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கும், மனிதர்களுக்கு இடையேயும் பரவி வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.