பஞ்சாப்பில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரல் அருகே திங்கள்கிழமை(நவ.14) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரல் அருகே திங்கள்கிழமை(நவ.14) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து மேற்கு-வடமேற்கில் 145 கிமீ தொலைவில் திங்கள்கிழமை அதிகாலை 3.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 120 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.