முகப்பு
இந்தியா

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.480 அதிகரித்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 5 அக்டோபர் 2022, 11:19 am IST
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நாட்டில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன.

நாட்டின் பணவீக்க உயர்வுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் தங்கத்தில் மக்கள் அதிகயளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். 

Advertisement

Advertisement

தங்கத்தில் முதலீடு செய்வதை சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வரை முக்கிய முதலீடாக கருதுவதால் அதில் அதிகயளவில் முதலீடு செய்து வருகின்றனர். 

இந்நிலையில்,  ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்களுடன் விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருவதும் அடுத்து சில நாள்களில் குறைக்கப்பட்ட விலையைவிட இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிப்பதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வந்தது. 

செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. அக்டோபார் மாதத்தில் அதிகரித்து வருகிறது.  

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.38,680-க்கும், கிராமுக்கு ரூ.60 அதிகரித்து, ரூ.4,835-க்கு விற்பனையாகி வருகிறது. 

அதேவேளையில், வெள்ளி கிராமுக்கு 4,20 பைசா அதிகரித்து, ரூ.67 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ 67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments