தில்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல்: பாதிப்பு 13 ஆக உயர்வு!
தில்லியில் நைஜீரியாவைச் சேர்ந்த பெண் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் மொத்த பாதிப்பு 13 ஆக உயர்ந்துள்ளது.
தில்லியில் நைஜீரியாவைச் சேர்ந்த பெண் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் மொத்த பாதிப்பு 13 ஆக உயர்ந்துள்ளது.
30 வயது நைஜீரியப் பெண்ணுக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது சோதனையில் தெரிய வந்தது. இது நகரின் எட்டாவது மற்றும் நாட்டில் 13வது பாதிப்பாகும்.
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் எல்என்ஜெபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
Advertisement
Advertisement
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரும் தில்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.