இந்தியா

வெடிகுண்டு வைத்திருப்பதாக பயணி மிரட்டல்: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு!

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

DIN

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்குச் செல்லும் பெண் பயணி ஒருவர் தான் கொண்டுவந்த பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதையடுத்து கூடுதல் கட்டணம் செலுத்த அந்தப் பெண் பயணி மறுத்துள்ளார். பின்னர், தான் கொண்டுவந்த பையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி அதிகாரிகளை மிரட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர் கொண்டுவந்த பைகளை சோதனை செய்தனர். ஆனால், அதில் சந்தேகத்திற்குரிய எந்தவித பொருளும் காணப்படவில்லை.

பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதற்காக பெண் பயணி வெடிகுண்டு வைத்திருப்பதாக அங்குள்ளவர்களை பீதியடைய செய்துள்ளார்.

இதையடுத்து, இந்த சம்பவத்திற்குப் பிறகு சஹார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பெண் பயணி கைது செய்யப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT