விபத்துக்குள்ளான சரக்கு ரயில்கள் 
இந்தியா

மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து!

மேற்குவங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) விபத்து நேர்ந்துள்ளது.

DIN


மேற்குவங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) விபத்து நேர்ந்துள்ளது. அதிகாலை சுமார் 4 மணியளவில் நடைபெற்ற இந்த ரயில் விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் பாங்குரா பகுதியிலுள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

காரக்பூர் - பாங்குரா - ஆட்ரா வழித்தடங்களில் செல்லும் ரயில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்துள்ளது. 

ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில், 12 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டன. 

ஒடிசாவில் சமீபத்தில் 2 பயணிகள் ரயில் - சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 290 பேர் உயிரிழந்தனர். தற்போது மேற்கு வங்கத்தில் மீண்டும் இரண்டு ரயில்கள் மோதி விபத்து நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

புதிய தொடரில் நடிக்கும் பாரதி கண்ணம்மா வினுஷா!

SCROLL FOR NEXT