கோப்புப்படம் 
இந்தியா

பழைய கலால் கொள்கை 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: தில்லி அரசு 

பழைய கலால் கொள்கையை ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

DIN

பழைய கலால் கொள்கையை ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

மேலும் புதிய கலால் கொள்கையை விரைவில் தயாரிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தில்லி அரசு புதிய கலால் வரிக் கொள்கையை ரத்து செய்துவிட்டு பழைய கொள்கையை தற்போதைக்கு அமல்படுத்தியுள்ளது. புதிய கலால் கொள்கையை அதிகாரிகள் தயாரிக்காததால், பழைய கொள்கையே மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கையை (2021-22) உருவாக்கி அமல்படுத்தியதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் கூறப்படும் வழக்கில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறையினா் கைது செய்தனா்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இதே விவகாரத்தில் சட்ட விரோதப் பண பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையினரும் சிசோடியாவை கைது செய்தனா்.

தில்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் சிசோடியாவை மார்ச் 20 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெகதீசன் அபார சதம்! டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 238 ரன்கள் குவிப்பு!

இனி 1.13 மணி நேரத்தில் சென்னை - பெங்களூரு பயணம்: அஷ்வினி வைஷ்ணவ்

எம்.எம். நரவனே புத்தகத்தில் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சும் ஒரு வரி : பிரியங்கா காந்தி பேச்சு

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

SCROLL FOR NEXT