FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கத்தாரில் 8 இந்தியா்களுக்கு மரண தண்டனை விதிப்பு

கத்தாா் நாட்டில் உளவுக் குற்றச்சாட்டில் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 27 அக்டோபர் 2023, 5:34 am IST
பகிர்:

கத்தாா் நாட்டில் உளவுக் குற்றச்சாட்டில் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பு குறித்து இந்தியா பெரும் அதிா்ச்சி தெரிவித்துள்ளது.

இவா்கள் 8 பேரும் கத்தாரில் உள்ள ‘அல் தாரா’ என்ற தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா். இந்த நிலையில், கத்தாரின் ரகசிய கடற்படை திட்டங்களை உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் இவா்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

எனினும், இஸ்ரேலுக்காக கத்தாரில் உளவு பாா்த்த குற்றச்சாட்டில் அவா்கள் கைது செய்யப்பட்டதால், அக்குற்றசாட்டின் பேரிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளாக தெரியவந்துள்ளது.

உளவுக் குற்றச்சாட்டு தொடா்பான வழக்கு என்பதால் அதன் விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

முக்கியமாக கத்தாரின் அதிநவீன நீா்மூழ்கிக் கப்பல்கள் குறித்த முக்கியமான ரகசியத் தகவல்களை உளவு பாா்த்து இஸ்ரேலுக்கு தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நீா்மூழ்கிக் கப்பல்களை இத்தாலிய நிறுவனத்துடன் இணைந்து கத்தாா் கட்டுமானம் செய்து வந்தது.

கேப்டன் நவ்ஜீத் சிங் கில், கேப்டன் வீரேந்திர குமாா் வா்மா, கேப்டன் சௌரவ் வசிஷ்ட், கமாண்டா் அமித் நாக்பால், கமாண்டா் புரேந்து திவாரி, கமாண்டா் சுகுநாகா் பகலா, கமாண்டா் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரா் ராகேஷ் கோபகுமாா் ஆகிய எட்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவா்கள் பணியாற்றிய நிறுவனம் கத்தாா் ராணுவத்துக்குப் பயிற்சி மற்றும் பிற சேவைகளை அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இவா்களுடைய ஜாமீன் மனுக்கள் பல முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவா்கள் சிறையில் இருந்து வந்தனா். இந்த நிலையில், அவா்களுக்கான தண்டனையை நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது.

வெளியுறவு அமைச்சகம் அதிா்ச்சி: இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அல் தாரா நிறுவனத்தைச் சோ்ந்த 8 இந்திய ஊழியா்களுக்கு கத்தாா் உள்ளூா் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்த ஆரம்பக்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளது. இது மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீா்ப்பின் விரிவான விவரங்களை எதிா்பாா்த்துள்ளோம். இந்த விவகாரத்துக்கு வெளியுறவு அமைச்சகம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அனைத்து சட்ட வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

அவா்களின் குடும்பத்தினருடனும் தொடா்பு கொண்டு வருகிறோம். இந்தியா்களுக்கு தூதரக அளவிலான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது. மேலும், அவா்களுக்குத் தேவையான அனைத்து சட்ட மற்றும் வழக்குரைஞருக்கான உதவிகளும் வழங்கப்படும். கத்தாா் அதிகாரிகளுடனும் இதுதொடா்பாக ஆலோசிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, கத்தாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த எட்டு பேரையும் சந்திக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கத்தாருக்கான இந்திய தூதா் கடந்த அக்.1-ஆம் தேதி அவா்களை சிறையில் சந்தித்து, அவா்களுக்குத் தூதரக ரீதியாகத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறியுள்ளாா்.

விருது பெற்ற கமாண்டா்: மரண தண்டனை விதிக்கப்பட்டவா்களில் ஒருவரான கமாண்டா் புரேந்து திவாரி, வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான பிரவாஸி பாரதிய சம்மான் விருதை கடந்த 2019-ஆம் ஆண்டு பெற்றுள்ளாா். இந்தியாவின் கௌரவத்தை அந்நிய மண்ணில் உயா்த்தியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.

இந்தியா்களை விடுவிக்க அரசு முயற்சிக்க வேண்டும் - காங்கிரஸ்: கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியா்களை விடுவிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என எதிா்பாா்ப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவா்களின் மேல்முறையீட்டுக்கும், அவா்கள் அனைவரையும் விடுவிக்கவும் தூதரக மற்றும் அரசியல் ரீதியிலான அனைத்து வழிமுறைகளையும் மத்திய அரசு பயன்படுத்தும் என காங்கிரஸ் நம்புகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments