FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வெனிஸ் திரைப்பட விழா: 93 வயதில் கோல்டன் லயன் விருது பெறும் நடிகை!

வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருது பெறும் ஹாலிட் நடிகை எலன் பர்ஸ்டின் குறித்து...

Updated On : 14 ஜூலை 2026, 8:13 pm IST
எலன் பர்ஸ்டின். - படம்: எக்ஸ் / La Biennale di Venezia.
பகிர்:

ஹாலிட் நடிகை எலன் பர்ஸ்டின் தனது 93ஆவது வயதில் வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருது பெறவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த எலன் பர்ஸ்டின் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தி லாஸ்ட் பிக்சர்ஸ் ஷோ, ரெகியூம் ஃபார் தி ட்ரீம், தி எக்ஸோர்ஷிட் போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆஸ்கர் விருது, எமி விருது, டோனி விருது ஆகிய மூன்றும் வென்றவர்களை ட்ரிபிள் க்ரௌன் ஆஃப் ஆக்டிங் (நடிப்பின் மூன்று கிரீடம்) வென்றவர் என்பார்கள். எலன் பர்ஸ்டின் இதனை வென்றுள்ளார்.

Advertisement

Advertisement

கடைசியாக 2023ல் தி எக்ஸோர்ஷிட்: பிலிவர் படத்தில் நடித்திருந்தார். இணையத்தொடர்களில் நடித்துள்ளார். நாடகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது புதிய படமான ப்ளேஸ் டூ பி வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

வெனிஸ் திரைப்பட விழா செப்.2 முதல் செப்.12ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கோல்டன் லயன் விருது வழங்கப்படும். இந்த முறை அந்த விருது எலன் பர்ஸ்டினுக்கு வழங்கி கௌரவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது குறித்து எலன் பர்ஸ்டின், “ஆச்சரியம்! மொத்த உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த வெனிஸ் நகரத்துக்குச் சென்று, கோல்டன் லயன் விருதை எனது கைகளில் பெற்று திரும்பவிருக்கிறேன்! வெனிஸ் திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது. நான் மிகவும் கௌரமாகவும் மகிழ்ச்சியாகவும் கருணையுடன் உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

summary

Ellen Burstyn to receive Golden Lion at Venice International Film Festival

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments