தில்லி கலால் கொள்கை: 8வது நபரை கைது செய்தது அமலாக்கத்துறை!
தில்லி கலால் கொள்கை மோசடியில் எட்டாவது நபரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது.
தில்லி கலால் கொள்கை மோசடியில் எட்டாவது நபரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது.
தில்லி கலால் கொள்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் எட்டாவது நபர் ராஜேஷ் ஜோஷி என்பவர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு விளம்பர நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்று அமலாக்கத் துறையினர் கூறியுள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட குற்றவாளி தினேஷ் அரோராவுடன் அவர் நெருங்கிய தொடர்புள்ளவர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. கோவா தேர்தலுக்காக ஜோஷி, அரோராவிடமிருந்து பணம் பெற்றார். இந்த பணம் கலால் கொள்கை ஊழலின் மூலம் வந்த வருமானம் என்று தெரிவிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
ஜோஷி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை இரண்டு வாரக் காவலில் வைக்க வேண்டும் அமலாக்கத்துறை தெரிவித்தன.
முன்னதாக, பஞ்சாபைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் மல்ஹோத்ராவை புதன்கிழமை அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் பிப்ரவரி 15 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட எட்டாவது நபரான ஜோஷி ஆவார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.