முகப்பு
இந்தியா

லக்னௌ-கொல்கத்தா விமானம் அவசர தரையிறக்கம்

கொல்கத்தாவுக்கு புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் லக்னௌ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

Updated On : 29 ஜனவரி, 2023 at 3:59 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

கொல்கத்தாவுக்கு புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் லக்னௌ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

உத்தர பிரதேச மாநிலம், லக்னௌ விமான நிலையத்திலிருந்து 170 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் இன்று காலை கொல்கத்தாவுக்கு புறப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் மீது பறவை மோதி உள்ளது. 

இதையடுத்து அந்த விமானம் லக்னௌ விமான நிலையத்தில் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 

பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள விமான நிர்வாகம் இந்நிகழ்விற்காக மன்னிப்பும் கோரியுள்ளது. ஏர் ஆசியா விமானத்தில் பறவை மோதிய நிகழ்வால் லக்னௌ விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.