முகப்பு
இந்தியா

ஒரே நாளில் 5 அமர்நாத் பயணிகள் பலி: உயிரிழப்பு 19 ஆக உயர்வு!

கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து அமர்நாத் பயணிகள் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 12 ஜூலை, 2023 at 5:36 PM
பகிர்:

கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து அமர்நாத் பயணிகள் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 

அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 

இந்நிலையில், பஹல்காம் வழித்தடத்தில் பயணித்த மூவர், பால்டால் பாதையில் பயணித்த இருவர் உள்பட கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் மாரடைப்பு காரணமாக பலியாகியுள்ளனர். 

Advertisement

உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் உத்தரப் பிரதேசத்தையும், ஒருவர் மத்தியப் பிரதேசத்தையும் சேர்ந்தவர் ஆவார். மேலும் ஒருவரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 

ஐந்து இறப்புகளோடு இந்தாண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கி பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளன. இதில் இந்திய-திபெத் பாதுகாப்புப் படை அதிகாரியும் அடங்குவர். 

அதிக உயரம் காரணமாக ஆக்ஸிஜன் செறிவு குறைவதால் மாரடைப்பு போன்ற இயற்கை மரணங்கள் நிகழ்கிறது. இது ஒவ்வொரு வருடமும் நிகந்துவரும் ஒன்றாகவே உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.