ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர், பாரமுல்லாவின் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகளுடன் இன்று அதிகாலை சிறிது நேரம் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அப்போது துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில மாதங்களாக, தோடா மற்றும் உதம்பூரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
Advertisement
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி யூனியன் பிரதேசத்தில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.