X | Congress
இந்தியா

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளுக்காக நீதி கோரி ராகுலுக்கு கடிதம்!

4 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை என்று பலியான பெண்ணின் குடும்பத்தினர் வருத்தம்

DIN

உத்தரப் பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பலியான பெண்ணுக்கு நீதி வேண்டி ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் 2020 ஆம் ஆண்டில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு இன்று வரையில் நீதி கிடைக்கவில்லை என்று பலியான பெண்ணின் குடும்பத்தினர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளனர்.

பலியான பெண்ணின் குடும்பத்தினர் அளித்த கடிதத்தையடுத்து, வியாழக்கிழமை (டிச. 12) அவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று ராகுல் காந்தி விவரங்களைக் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சுமார் 35 நிமிடங்கள் வரையில் ராகுல் காந்தி உரையாடினார். மேலும், கடிதத்தையும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

கடிதத்தில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, என் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், அவரது முதுகெலும்பு உடைக்கப்பட்டு, உடலும் சிதைக்கப்பட்டது. மேலும், குடும்பத்தினரின் அனுமதியின்றி, அவரது உடலைக் காவல்துறையினர் தகனம் செய்து விட்டனர். தகனம் செய்யப்பட்டது, எங்கள் மகளின் உடல் தானா? என்பதுகூட தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் வீடும் வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். ஆனால், இன்றுவரையில் வேலையும் வீடும் வழங்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, குற்றம் செய்தவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள்; ஆனால், சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு என்ற பேரில் வீட்டுக்குள்ளேயே நாங்கள் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறோம்’’ என்று கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT