குடும்பத் தகராறில் குழந்தையை கிணற்றில் வீசிய பாட்டி!
உத்தரப் பிரதேசத்தில் 10 வயது குழந்தையைக் கிணற்றில் வீசிக்கொலை செய்த பாட்டியைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் 10 வயது குழந்தையை அவரது பாட்டி கிணற்றில் வீசிக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள நோன்ரா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பத்து வயதான ரியா எனும் பெண் குழந்தையை குடும்பப் பிரச்னையால் கிணற்றில் வீசிக் கொலை செய்த பாட்டியைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிணற்றில் வீசப்பட்ட குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பாஜக பிரமுகர் கொலைவழக்கில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு!
குழந்தையின் உடல் உடற்கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 50 வயதான பாட்டி சுதாமா தலைமறைவாகியிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.