FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: ராணுவம் உறுதி

‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணமடைந்த மாவீரா்களுக்கு ஒட்டுமொத்த ராணுவம் சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது’ என்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.

Updated On : 17 ஜூலை 2024, 1:13 am IST
கோப்புப் படம் - ஏபி
பகிர்:

ஜம்மு: ‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணமடைந்த மாவீரா்களுக்கு ஒட்டுமொத்த ராணுவம் சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது’ என்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்ட வனப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

இதுதொடா்பாக ராணுவம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை வேரறுக்க ராணுவத்தின் வடக்கு மண்டலப் பிரிவுகள் உறுதிபூண்டுள்ளன. பல்வேறு முகமைகளுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராக இடைவிடாத நடவடிக்கைகள் தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஜம்முவில் மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாதம்: ஜம்மு பிராந்தியத்தில் பல்லாண்டுகளாக நீடித்த பயங்கரவாதம் கடந்த 2005-ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டதில் இருந்து 2021-ஆம் ஆண்டு வரை பரவலாக அமைதி நீடித்தது. ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தால், ஜம்முவில் குறிப்பாக எல்லை மாவட்டங்களில் 2021-ஆம் ஆண்டில் பயங்கரவாத செயல்பாடுகள் மீண்டும் தலைதூக்கின. கடந்த சில மாதங்களாக தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments