முகப்பு
இந்தியா

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: ஆக.12-ல் விசாரணை!

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு.

Updated On : 26 ஜூலை, 2024 at 9:47 AM
ராகுல் காந்தி
பகிர்:

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான அவதூறு கருத்துகள் தொடர்பான வழக்கில் ராகுல் காந்தி இன்று காலை சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பாஜகவைச் சோ்ந்த விஜய் மிஸ்ரா சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான வழக்குரைஞர் சந்தோஷ் குமார் பாண்டே முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த குற்றச்சாட்டுகளை ராகுல் மறுத்துள்ளார். அரசியல் காரணங்களுக்கானவும், தன் பெயரைக் கெடுக்கும் நோக்கத்திற்காகவும் புனையப்பட்ட வழக்கு என்று அவர் கூறினார். மேலும் நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →