முகப்பு
இந்தியா

எடியூரப்பா மீதான போக்ஸோ வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்ஸோ வழக்கின் விசாரணையை கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Updated On : 26 ஜூலை, 2024 at 9:28 PM
எடியூரப்பா(கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 26 ஜூலை, 2024 at 9:25 PM

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்ஸோ வழக்கின் விசாரணையை கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பெங்களூரு, சதாசிவ நகா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் தாக்கல் செய்திருந்த புகாரில், பெங்களூரு, டாலா்ஸ் காலனி இல்லத்தில் பிப். 2-ஆம் தேதி முன்னாள் முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த போது, தனது 17 வயது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தாா். இதனடிப்படையில், பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டப்பிரிவு 8, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354ஏ-இன்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Updated On : 26 ஜூலை, 2024 at 9:28 PM

இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) மாற்றி மாநில டிஜிபி உத்தரவிட்டிருந்தாா். இந்த வழக்கை சிஐடி விசாரித்து வருகிறது. ஜூன் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகாததால், எடியூரப்பாவைக் கைது செய்ய கைது ஆணை பிறப்பிக்குமாறு பெங்களூரில் உள்ள முதலாம் விரைவுநீதிமன்றத்தை சிஐடி ஜூன் 13-ஆம் தேதி அணுகியிருந்தது. அதன்பேரில், எடியூரப்பாவைக் கைது செய்ய ஜாமீனில் வெளியே வரமுடியாத ஆணை பிறப்பித்து ஜூன் 13-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Updated On : 26 ஜூலை, 2024 at 9:28 PM

இதனிடையே, தன் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள போக்ஸோ வழக்கை ரத்து செய்யக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுதாக்கல் செய்திருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன்பு ஜூன் 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.