தெலுங்கானா உருவான தினம்: கோலாகல கொண்டாட்டம்!
தெலுங்கானா தின விழாவில் கோலாகல கொண்டாட்டங்கள்!
ஹைதராபாத்: தெலங்கானா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் ஹைதராபாத்தில் நடைபெற்ற 10வது மாநில அமைப்பு தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டேங்க் காட்டில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்திய ரேவந்த் ரெட்டி, பிறகு ஆளுநரை வரவேற்றார். தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழு அமைத்துள்ள ஸ்டால்களை முதல்வரும், கவர்னரும் பார்வையிட்டனர்.
இதனையடுத்து பாரம்பரிய கலைஞர்களின் நிகழ்ச்சிகள், தேசிய கொடிகளை கையில் ஏந்திய பயிற்சி போலீஸாரின் 'கொடி அணிவகுப்பு', வண்ணமயமான வானவேடிக்கைகள் மற்றும் லேசர் ஷோ ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்றது.
Advertisement
Advertisement
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்த தெலுங்கானா கவிஞர் ஆண்டே ஸ்ரீ எழுதிய 'ஜெய ஜெய ஹே தெலுங்கானா' என்ற புதிய மாநில கீதம் இசைக்கப்பட்டது. முன்னதாக, இங்குள்ள அணிவகுப்பு மைதானத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த விழாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.