மாநிலங்களுக்கு கூடுதல் நிதி விடுவிப்பு! நிதியமைச்சகம் அறிவிப்பு
மாநிலங்களுக்கு வரிப் பகிர்வின் கூடுதல் தவணை தொகை விடுவிப்பு!
மாநிலங்களுக்கு ஜூன் மாதத்தில் வரி பகிர்வில் கூடுதல் தவணை தொகை விடுவிக்கப்படுமென நிதி அமைச்சகம் இன்று(ஜூன் 10) அறிவித்துள்ளது.
மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும், மூலதனச் செலவுகளுக்காகவும் கூடுதல் தவணை விடுவிக்கப்பட உள்ளது. இதன்மூலம், ஜூன் மாதத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை ரூ. 1,39,750 கோடியாக அதிகரிக்கும்.
இதன்மூலம், 2024 - 25 நிதியாண்டில் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள மொத்த தொகை(ஜூன் 10-ஆம் தேதி வரை) ரூ. 2,79,500 கோடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
2024 - 25 நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட்டுள்ள மொத்த தொகை(ஜூன் 10-ஆம் தேதி வரை) ரூ. 5,700.44 கோடியாக அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.